Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

By: vaithegi Thu, 25 Aug 2022 1:40:01 PM

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

தூத்துக்குடி : தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராமங்களில் இருக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தி குறைந்துள்ளதால் மின்தடை ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து கொண்டு வருகின்றனர். இந்தியாவில் மக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்க மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களை சரிவர பராமரிப்பது அவசியம்.

power outage,thoothukudi ,மின்தடை,தூத்துக்குடி

இதை கருத்தில் கொண்டு மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படும் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாதவாறு மின்தடை செய்யப்படுகிறது.

எனவே அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட கல்லாமொழி உப மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம் மற்றும் உடன்குடி அனல் மின் நிலைய பகுதிகளில் நாளை (ஆக. 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :