Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் மின்தடை

திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் மின்தடை

By: vaithegi Thu, 28 July 2022 1:01:06 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் மின்தடை

திருவள்ளூர் : திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 4 க்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் இன்று (ஜூலை 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் துறை உதவி செயற்பொறியாளர் முரளி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 29) அன்று திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

power outage,thiruvallur ,மின்தடை ,திருவள்ளூர்

எனவே இதன் காரணமாக திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஐ.ஆர்.என். பின்புறம், ராஜாஜிபுரம், ஸ்ரீநிகேதன் பள்ளி, எஸ்.வி.கோவில் தெரு, காந்திபுரம், கணபதி நகர், தேவி மீனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளுக்கும காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேமாதிரி, திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருவதாலும் திருத்தணி துணை மின் நிலையத்திற்குட்பட்ட சரஸ்வதி நகர், வள்ளியம்மாபுரம், வள்ளியம்மாபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் பெருமாள்தாங்கல் புதூர் ஆகிய இடங்களில் நாளை (ஜூலை 29) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 30) ஆகிய 2 நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags :