- வீடு›
- செய்திகள்›
- புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை
By: vaithegi Mon, 29 Aug 2022 6:58:43 PM
புதுக்கோட்டை : தமிழகத்தில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க முக்கிய காரணமாக மின் ஊழியர்கள் திகழ்கின்றனர். மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள், மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்கள் சரி செய்வது, மக்களுக்கு மின் கசிவில் இருந்து பாதுகாப்பு அளிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே இதன் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து மேலும், மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடும் போது அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை அறிவிக்கப்படுகிறது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற இருப்பதால் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், ஆலங்காடு, கீழாத்தூர், சூரண்விடுதி ஆகிய பகுதிகளிலும்
மேலும் பசுவயல், அரையாப்பட்டி, பள்ளத்திவிடுதி, உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வடகாடு மின்வாரிய செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.