Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்டம்பர் 14ம் தேதியான நாளை புதன்கிழமை அன்று பழங்கரை, பெருமாநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி ... மின்தடை

செப்டம்பர் 14ம் தேதியான நாளை புதன்கிழமை அன்று பழங்கரை, பெருமாநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி ... மின்தடை

By: vaithegi Tue, 13 Sept 2022 7:24:42 PM

செப்டம்பர் 14ம் தேதியான நாளை புதன்கிழமை அன்று பழங்கரை, பெருமாநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி  ...   மின்தடை

சென்னை: தமிழகம் முழுவதும் தடை இல்லாத மின்சாரம் அளிக்கப்படுகிறது. ஆனால், இவற்றிற்கான முறையான பராமரிப்பு அவசியம் என்பதால் மாநிலம் முழுவதும் முறையான முன்னறிவிப்புடன் பராமரிப்பு பணிகளுக்காக பகுதி வாரியாக மின் விநியோகம் நிறுத்தம்செய்யப்படுகிறது. இது போன்ற பராமரிப்பு பணிகளின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது.

அதன்படி , பழங்கரை, பெருமாநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் செப்டம்பர் 14ம் தேதியான நாளை புதன்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது என மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி அறிவித்துள்ளார்.

power outage,phalangarai,perumanallur,maintenance work ,மின்தடை ,பழங்கரை, பெருமாநல்லூர் , பராமரிப்பு பணி

இதை அடுத்து அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஓ.ஆபிஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம்,வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிப்பாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி,நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமிநகர், முல்லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளிலும்

மேலும் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம்,காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர்,எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :