Advertisement

நாளை இங்கு மின்தடை

By: vaithegi Sun, 19 Nov 2023 4:18:02 PM

நாளை இங்கு மின்தடை

சென்னை: சென்னையில் நாளை மின் இணைப்பு சரிபார்க்கும் பணி நடைபெறுவதால் எந்தெந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை ....தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் இணைப்பு பகுதிகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பு செய்யப்படுகிறது.

அதிலும், குறிப்பாக தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மின்கசிவு மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் மின் துறை ஊழியர்கள் இரவும், பகலுமாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், நாளை சென்னையில் உள்ள மின் கம்பங்களில் மின் இணைப்பு பணி செய்யப்படயிருக்கிறது.

heavy rain,blackout,power supply ,கனமழை ,மின்தடை ,மின் விநியோகம்


அதாவது, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடப்பேரி சிட்லம்பாக்கம் 2-வது மற்றும் 3-வது மெயின் தெரு, நீதிபதி காலனி, பால விநாயகர் கோயில் தெரு, மீனாட்சி தெரு, பெரியார் தெரு (1 முதல் 7-வது குறுக்குத் தெரு), ஐயப்பா தெரு ஆகிய பகுதியிலும்

இதனை அடுத்து எஸ்.பி.ஐ காலனி, காந்தி தெரு (1-வது மற்றும் 2-வது குறுக்குத் தெரு), அண்ணா தெரு, நேரு தெரு, பல்லாவரம் ரோடு, இந்திரா காந்தி ரோடு, ஒலிம்பியா கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரியம் கோட்ட சொற்பொழிவாளர்தெரிவித்துள்ளார்.

Tags :