Advertisement

அரியலூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை

By: vaithegi Wed, 03 Aug 2022 10:42:45 AM

அரியலூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை

அரியலூர் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் மின்தடை ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது. அதனால் மின்சார விபத்துகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில் மின் விபத்துகளை தடுக்கவும், மின்சார தடை ஏற்படாதவாறு இருக்கவும் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டு வருகிறது.

அதன்படி நாளை (ஆகஸ்ட் 4) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

power outage,ariyalur ,மின்தடை,அரியலூர்

இதை அடுத்து மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை பற்றியும் மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்களை பற்றி பார்க்கலாம். அந்த வகையில், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், பூண்டி, மலத்தான்குளம், சில்லக்குடி, மேததால், திம்மூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர் ஆகிய பகுதிகளிலும்

மேலும் கீழ் வண்ணம், ஆகிய ஊர்களில் நாளை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் தடை என உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அந்த ஏரியாவில் உள்ள மக்கள் மின்தடைக்கு ஏற்றார் போல வேலைகளை முன் கூட்டியே செய்து வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :