கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 26 ) மின்தடை
By: vaithegi Mon, 25 July 2022 1:17:32 PM
கோயம்புத்தூர் : கோவை மாவட்டத்தில் உள்ள பீடம்பள்ளி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பீடம்பள்ளி துணை மின் நிலையத்தை உள்ளிட்ட பகுதிகளில் கள்ளபாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கள், பாப்பம்பட்டி, நாகமநயக்கன்பாளையம், செல்வராஜபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம் போன்ற பகுதிகளில் மின்தடை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதை தொடர்ந்து ன் மறுநாள் ( ஜூலை 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாவட்டத்தில் உள்ள இருகூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இருகூர் மின் நிலையத்தை சார்ந்த இருகூர்.
ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம், சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம், சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், கோல்டுவின்ஸ், அந்தப்பகவுண்டன்புதூர் போன்ற பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படவுள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.