கடையநல்லூர் பகுதியில் (ஜூலை 21) மின்தடை
By: vaithegi Tue, 19 July 2022 7:10:09 PM
கடையநல்லூர் : கடையநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட நாரணபுரம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் தற்போது மின்வாரியம் அறிவித்துள்ள மின்னிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் இதோ, தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், வெள்ளாளங்கோட்டை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம் ஆகிய துணை மின் நிலையங்களிலும் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி.
மேலும் ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, குறிஞ்சாகுளம், புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்தடை சொற்பொறிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.