Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்தடை

By: vaithegi Wed, 06 July 2022 2:31:57 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்தடை

காஞ்சிபுரம்: தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படும்.

power outage,kanchipuram ,மின்தடை ,காஞ்சிபுரம்

இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறார். இதை அறிந்து மின் பயனர்கள் மின் தொடர்பான வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற பகுதிகளை நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் காரை, சிறுவாக்கம், எடையார்பாக்கம், பட்டுமுடையாா் குப்பம், துளசாபுரம், கூத்திரம்பாக்கம், வரதாபுரம், தண்டலம், ஏகனாபுரம், கண்டிவாக்கம், கோட்டூர், பிச்சிவாக்கம், செல்லம்பட்டிடை, நெல்வாய், மேல்பொடவூா், வேடல், ஆண்டி சிறுவள்ளூர், கொட்டவாக்கம், பரந்தூா் ஆகிய இடங்களுக்கும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags :