Advertisement

காரைக்குடியில் வருகிற வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) மின்தடை

By: vaithegi Tue, 02 Aug 2022 3:36:46 PM

காரைக்குடியில் வருகிற வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) மின்தடை

காரைக்குடி: தமிழகம் தற்போது பெய்து வரும் தொடர் மழையாலும் மின் பாதிப்பு ஏற்பட அதிகளவு வாய்ப்பு உள்ளது. அதற்காகவே இந்த மின் பராமரிப்பு பணியானது முக்கியம். அதன்படி நாளை மறுநாள் (ஆக. 4) காரைக்குடி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

மேலும் அப்பணியின் போது ஒருசில இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், எந்தெந்த பகுதிகளில் எப்போது வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்ற விவரத்தையும் தற்போது காரைக்குடி மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

power outage,karaikudi ,மின்தடை ,காரைக்குடி

அந்த வகையில், கானாடுகாத்தான் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய ஸ்ரீ ராம்நகர், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி,

மேலும் ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என காரைக்குடி மாவட்ட மின்வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :