Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை

கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை

By: vaithegi Fri, 24 June 2022 7:19:50 PM

கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை

தூத்துக்குடி : கோவில்பட்டி துணை மின் நிலையங்களில் மின் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் பசுவந்தனை உப மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் நாகம்பட்டி, சில்லாங்குளம், எம். துரைசாமிபுரம் உப மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சவலாப்பேரி, வாகைகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எட்டயபுரம் பகுதியிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராமனூத்து, சிந்தலக்கரை, குமரெட்டியாபுரம், ஆர். வெங்கடேஸ்வர புரம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார்.

resistor,power board,electricity ,மின்தடை,மின்வாரியம்,மின்சாரம்

அதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர் பகுதி துணை மின் நிலையங்களில் மின் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் சமத்துவபுரம், தேரிப்பனை, பிள்ளைமடையூர், ஏழுவரைமுக்கி, வடலிவிளை, தோப்பூர் , கொட்டங்காடு, ஞானியார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, வெங்கட்ராமானுஜபுரம், மெய்யூர், கடாட்சபுரம், அன்பின்நகரம், பிறைகுடியிருப்பு, பெரியதாழை, பூச்சிக்காடு பகுதிகள் மற்றும், சுதந்திர நகர், லெட்சுமிபுரம், பூந்தோட்டம், வடக்கு காயல்பட்டண உப்பள பகுதிகள்

மேலும், குரும்பூர் பஜார், முஸ்ஸிலீம் தெரு, அருளானந்தபுரம், வடக்கு பொத்தக்காலன்விளை, நரையன்குடியிருப்பு, மதகநேரி, பனைகுளம், வைத்தியலிங்கபுரம், ராமசாமிபுரம், சங்கிவிளை, சுப்ரமணியபுரம், வடக்கு குமாரசாமிபுரம், அம்மாள் புரம், வெள்ளாளன்விளை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜய் சங்கரபாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :