Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 2) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை

மதுரை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 2) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை

By: vaithegi Sun, 31 July 2022 6:36:30 PM

மதுரை மாவட்டத்தில்  (ஆகஸ்ட் 2) காலை 9  முதல் மாலை 5 மணி வரை மின்தடை

மதுரை : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக இப்பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிக்கப் பட்டு வருகின்றன.

power outage,madurai ,மின்தடை,மதுரை

அந்த வகையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2) மதுரை இலந்தைகுளம் பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் அப்பதியை சுற்றியுள்ள சில இடங்களுக்கு மின்விநியோகம் இருக்காது என மின் வாரியத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது மதுரை மாவட்ட இலந்தைகுளம் பகுதியில் இருக்கும் ஐ.டி.பார்க் துணை மின்நிலையத்தில் மாதந்தோறும் நடைபெரும் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கீழே குறிப்பிடப்படவுள்ள பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும்.

மேலும் இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரன்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி கார்டன், ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தகவல் வெளியுட்டுள்ளது.

Tags :