Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்தடை

மதுரை மாவட்டத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்தடை

By: vaithegi Tue, 12 July 2022 12:21:07 PM

மதுரை மாவட்டத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்தடை

மதுரை : தமிழகம் முழுவதும் தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின்துண்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் தான் பெரும்பாலும் மின்கசிவு ஆகிய நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. மின்கசிவு ஏற்பட்டு சாலையில் தேங்கி கிடக்கும் நீரின் காரணமாக அறியாதவிதமாக சில விபத்துகளும் ஏற்பட காரணமாகி விடுகின்றன. மேலும், இந்த விபத்துகளில் இருந்து மீள அவ்வப்போது அரசின் சார்பாக மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் முறையாக பழுது பார்க்கப்படுகிறது.

இதனால் மின்தடை செய்ய இருக்கும் பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவுபடுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆனையூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, எந்தெந்த பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்பட இருக்கிறது.

power outage,madurai ,மின்தடை,மதுரை

அதாவது, ஆனையூர் பகுதியில் உள்ள பாலமேடு பிரதான சாலை, சொக்கலிங்க நகா் முதல் 7-ஆவது தெரு வரை, பெரியாா் நகா், அசோக் நகா், புதுவிளாங்குடி, கூடல் நகா், ஆா்.எம். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகா், பாத்திமா கல்லூரி எதிா்புறம்,

மேலும் பழைய விளாங்குடி, சக்தி நகா், துளசி வீதி, திண்டுக்கல் பிரதான சாலை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகா், கரிசல்குளம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி பிரிவு, லட்சுமிபுரம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :