Advertisement

மதுரை மாவட்டத்தில் (ஜூன் 13) மின்தடை

By: vaithegi Sun, 12 June 2022 8:56:16 PM

மதுரை மாவட்டத்தில் (ஜூன் 13) மின்தடை

மதுரை :
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனையடுத்து, மதுரை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் நாளை (13.06.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் ரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில் காலனி, மேலப்பொன்னகரம் 10 – – 12 தெரு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், சி.ஏ.எஸ். நகர், சொக்கு பிள்ளை நகர், அண்ணா நகர், அக்ரஹாரம், புரசரடி, ஜெ.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம்.நகர், எஸ்.கே.ஆர். நகர், முல்லை நகர், ராஜிவ் காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரியரத வீதி குடியிருப்பு.சமயநல்லுார் ராஜக்காபட்டி, மறவர்பட்டி ஆகிய பகுதிகளில் ஜூன் 13ம் தேதி மின் தடை செய்யப்படும்.
அதனை தொடந்து சத்திரவெள்ளாளபட்டி, வையம்பட்டி, ராமகவுண்டன்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, சமத்துவபுரம், அங்கப்பன்கொட்டம்.வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாபட்டி, ஆலம்பட்டி, சேக்கிபட்டி, ஆ.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி, கொட்டகுடி, சாணிபட்டி, புலிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

Tags :