Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை

குளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை

By: vaithegi Mon, 11 July 2022 7:14:56 PM

குளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை

குளத்தூர் : தமிழகத்தில் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்ய தமிழக அரசின் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்தடை சாதனங்களில் ஏதேனும் கோளாறுகள் இருக்கிறதா என்று சரிபார்க்கப்படுகிறது.

மேலும், மின்கசிவு ஏற்படா வண்ணம் மின்னணு சாதனங்கள் அனைத்தும் முறையாக சரிபார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மின்தடை செய்யப்படுவதற்கு முன்பாகவே அந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு தெரிவுபடுத்தப்படுகின்றன. அதன்படி தற்போது குளத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை ( 12-07-22 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குளத்தூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage,kulathur ,மின்தடை,குளத்தூர்

மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் இதோ, குளத்தூர், இளையா வயல், நாஞ்சூர், பிரதகம்பாள்புரம், சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியகுடி, தாயினிப்பட்டி, விளத்துப்பட்டி,

மேலும் ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துக்கருப்பு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :