Advertisement

தமிழகத்தில் நாளை பல பகுதிகளிலும் மின்தடை

By: vaithegi Wed, 14 Sept 2022 3:11:58 PM

தமிழகத்தில் நாளை பல பகுதிகளிலும் மின்தடை

சென்னை: தமிழக அரசு மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரத்தை அளிக்க வேண்டும் என்று பல்வேறு வகைகளிலும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. எனவே இதற்காக மின்பாதைகள், மின்மாற்றிகள் மற்றும் மின்வாரியத்தின் உபகரணங்கள் போன்றவற்றை முறையாக பராமரித்து கொண்டு வருகிறது. இந்த பணிகள் மாதந்தோறும் தகுந்த மின்தடை முன்னறிவிப்புடன் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பீளமேடு, ஒத்தக்கால் மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செப்டம்பர் 15ம் தேதியான நாளை வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளதால், பீளமேடு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

electric resistance,electricity ,மின்தடை ,மின்சாரம்


மின்தடை பகுதிகள்: பீளமேடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, பாரதி காலனி, எஸ்.எல்,வி காம்ப்ளக்ஸ் சாலை, வி.என்.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அகிலாண்டேஸ்வரி நகர், சின்னசாமி லே- அவுட், எல்லைத்தோட்டம், ஆர்கஸ் நகர், ஹோப் காலேஜ், பெருமாள் கோயில், ரங்கவிலாஸ் மில், எஸ்.ஆர்.சி,பீடர், பாரதி நகர் பீடர், பி.எஸ்.ஜி.பீடர், ஜெயலட்சுமி மில் பீடர், ராமநாதபுரம் பீடர், பீளமேடு பீடர், ஆர்.கே.பீடர், புலியகுளம் பீடர், லட்சுமி மில் பீடர், சௌரிபாளையம் பீடர், உடையார்பாளையம் பீடர் ஆகிய பகுதிகளும்

மேலும் ஒத்தக்கால் மண்டபம் துணை மின் நிலையத்தை சேர்ந்த பகுதிகளான, மலுமிச்சம் பட்டி ( ஒரு பகுதி), ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ( ஒரு பகுதி), ஒத்தக்கால் மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரிமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக் குப்பை, தேகானி, செட்டிபாளையம்.

Tags :