Advertisement

மயிலாடுதுறையில் நாளை (ஜூலை 7) மின்தடை

By: vaithegi Wed, 06 July 2022 5:56:53 PM

மயிலாடுதுறையில்  நாளை (ஜூலை 7) மின்தடை

மயிலாடுதுறை: தமிழகத்தில் மின் நிலையங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்கிறதா? வயர்கள் மரக்கிளைகளில் உரசி கொண்டிருக்கிறதா மற்றும் புதிய கருவி நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மின் தடை செய்யப்பட்டு மின் ஊழியர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்னால் , சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட எடமணல், அரசூர், ஆச்சாள்புரம், பொறையாறு, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு மற்றும் கிடாரன் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று சீர்காழி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கி. விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

power outage,mayiladuthurai ,மின்தடை,மயிலாடுதுறை

அதை தொடர்ந்து, நீடூர் துணை மின் மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நீடூர், வில்லியநல்லூர், பாலாக்குடி, கொற்கை, கங்கணம்புத்தூர்,நடராஜபுரம், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லூர், மல்லியக்கொல்லை, கொண்டல்.

மேலும், தாழஞ்சேரி, அருண்மொழித்தேவன், மேலாநல்லூர், கீழமருதாந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மயிலாடுதுறை கோட்ட மின் செயற்பொறியாளர் வை. முத்துக்குமரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :