Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 12) அன்று தேனி மாவட்ட பகுகுதிகளில் மின் நிறுத்தம்

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 12) அன்று தேனி மாவட்ட பகுகுதிகளில் மின் நிறுத்தம்

By: vaithegi Thu, 11 Aug 2022 6:44:45 PM

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 12) அன்று தேனி மாவட்ட பகுகுதிகளில் மின் நிறுத்தம்

தேனி : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதம் ஒருமுறை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். ஏனெனில் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் நேரிட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. இதனால் பல உயிர் சேதங்களும் ஏற்படும். எனவே அதனை தவிர்ப்பதற்காகவே முக்கியமாக இந்த மின் பராமரிப்பு பணிகள் தவறாது ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை (ஆக.12) அன்று தேனி மாவட்டதில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என செயற் பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

power outage,theni , மின் நிறுத்தம் ,தேனி

ஏனெனில் பராமரிப்பு பணியின் போது பகுதி மக்களுக்கோ அல்லது பணியை மேற்கொள்ளவிருக்கும் ஊழியருக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக மின் தடை செய்யப்படும்.

அதன்படி, சின்னமனுார், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிகுத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாப்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை (ஆகஸ்ட் 12) அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :