Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 8ம் தேதி மின்தடை

By: vaithegi Thu, 07 July 2022 6:06:55 PM

பெரம்பலூர் மாவட்டத்தில்  ஜூலை 8ம் தேதி மின்தடை

பெரம்பலூர்: தமிழகத்தில் மாதந்தோறும் தவறாது மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இதுபற்றி அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறார்கள். இதை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை ( ஜூலை 8) பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

power outage,perambalur ,மின்தடை,பெரம்பலூர்

இதனால் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ். குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணிபாளையம், திருவளகுறிச்சி.

மேலும், அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9.45 மணி முதல் மின் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் தடை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :