Advertisement

புதுக்கோட்டையில் திங்கட்கிழமை (ஜூலை 4) மின்தடை

By: vaithegi Sun, 03 July 2022 5:04:29 PM

புதுக்கோட்டையில் திங்கட்கிழமை (ஜூலை 4) மின்தடை

புதுக்கோட்டை: அனைத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை பராமரிப்பது மிக முக்கியம் என்பதால் இப்பணியின் போது சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

அதன்படி நாளை 4ந் தேதி புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய ராஜ கோபாலபுரம் உட்பட சில பகுதிகளில் மின் தடை செய்யப் போவதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது..

power outage,power board ,மின்தடை ,மின்வாரியம்

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை ஜூலை 4ல் மின் பராமரிப்பு பணிகள் நிமித்தம் அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ராஜ கோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம்.

மேலும், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :