Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (29.07.2022) மின்தடை

By: vaithegi Thu, 28 July 2022 4:16:59 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (29.07.2022) மின்தடை

ராமநாதபுரம் : மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது.அதனை தொடர்ந்து பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

இது பற்றி அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது. இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர்.

power outage,ramanathapuram ,மின்தடை ,ராமநாதபுரம்

மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.அம்மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்திராநகர், ஆர்.எஸ்.மங்கலம், ஆவரேந்தல், பாரனூர், கலங்காபுளி, சித்தூர்வாடி, அழிந்திக்கோட்டை.

மேலும் அத்தானூர், உப்பூர், கடலூர், மோர்ப்பண்ணை, காவனூர், துத்தியேந்தல் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 வரை மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :