Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ஜூலை 22ம் தேதி மின்தடை

By: vaithegi Thu, 21 July 2022 12:40:25 PM

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ஜூலை 22ம் தேதி மின்தடை

சிவகங்கை : தமிழகத்தில் இருக்கும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை செய்து கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மாதம் ஒரு முறை மின்தடை அறிவிக்கப்பட்டு, மின்நிலையங்களில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், ஏதேனும் வயர்கள் பழுதடைந்து இருக்கிறதா மற்றும் வயர்களில் உரசும் மரக் கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே இந்த பணிகளை செய்யும் ஊழியர்களுக்கும், மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின்விநியோகம் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

power outage,sivagangai ,மின்தடை,சிவகங்கை

அதன்படி நாளை வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதிகளான பூ சாலக்குடி துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான மு. சிறுவனூர், தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன் வயல், கண்ணங்குடி, கப்பலூர்.

மேலும் அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்கலம், மு. சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தாழைப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என சிவகங்கை மின் செயற்பொறியாளர் சி. ரவி தெரிவித்துள்ளார்.

Tags :