Advertisement

நாளை சிவகங்கை மாவட்டத்தில் மின்தடை

By: vaithegi Thu, 11 May 2023 3:30:57 PM

நாளை சிவகங்கை மாவட்டத்தில் மின்தடை

சிவகங்கை : நாளை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை ...

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை திருப்புவனம் நெல்முடிக்கரை பகுதியில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால் மின் விநியோகம் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

power outage,sivagangai ,மின்தடை ,சிவகங்கை

மேலும், எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்பதற்கான அறிவிப்பையும் தற்போது மானாமதுரை மின்வாரிய சொற்பொழிவாளர் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதாவது, நாளை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

திருப்புவனம், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், கீழச்சொரிக்குளம், மேலச்சொரிக்குளம், முதுவந்திடல், டி.பாப்பாங்குளம், பிரமனூர், பழையனூர், வயல்சேரி, கீழராங்கியம், மேலராங்கியம், அல்லிநகரம், கலியந்தூர், மாங்குடி, அம்பலத்தாடி, மேலவெள்ளூர், பொட்டப்பாளையம், பாட்டம், கொந்தகை, கீழடி, மணலூர், தட்டாங்குளம், மடப்புரம், பூவந்தி ஆகிய பகுதிகளில் மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :