Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஆகஸ்டு 22) மின்தடை

By: vaithegi Sun, 21 Aug 2022 7:16:18 PM

சிவகங்கை மாவட்டத்தில்  நாளை (ஆகஸ்டு 22) மின்தடை

சிவகங்கை : தமிழகத்தில் மின் விபத்துகளை தடுக்கவும், மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது. இப்பராமரிப்பு பணிகளின் போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மாற்றுதல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது.எனவே அதன்படி நாளை (22.08.2022) சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை ஆகிய பகுதிகளும்

power outage,sivagangai ,மின்தடை,சிவகங்கை

மேலும் அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ண மங்கல பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, எஸ்.வி.மங்கலம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து காளாப்பூர் பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :