Advertisement

சிவகங்கையில் ....... (ஜூன் 22) மின்தடை

By: vaithegi Mon, 20 June 2022 8:38:36 PM

சிவகங்கையில் ....... (ஜூன் 22) மின்தடை

சிவகங்கை: ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் மின்கம்பங்களில் ஏற்படும் மின் கசிவு மற்றும் மின் பாதையில் நிகழும் போன்ற சில பிரச்சனைகளால் விபத்துகள் நேரிடுகிறது.

இவற்றை தவிர்ப்பதற்காகவே மாதம் ஒரு முறை பராமரிப்பு பணி கட்டாயமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்தடை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பணி நடைபெறும் பொழுது ஆங்காங்கே மின் விநியோகமும் தடை செய்யப்படும்.

electrical leakage,power outage,power supply , மின் கசிவு ,மின்தடை ,மின்விநியோகம்

அவ்விதமாக நாளை மறுநாள் புதன்கிழமை (ஜூன் 23) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. அதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும், கண்ணங்குடி, கப்பலுார், சிறுவாச்சி, அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்கலம், மு.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர் பகுதிகளில் மின்தடை என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன் வயல், தாழையூர் என அருகில் இருக்கும் இடங்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வருகிற ஜூன் 22 அன்று காலை 10 மணியளவில் தொடங்கி மதியம் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என அம்மாவட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Tags :