Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மறுநாள் இந்த மாவட்டத்தில் சேர்ந்த சில குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை

நாளை மறுநாள் இந்த மாவட்டத்தில் சேர்ந்த சில குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை

By: vaithegi Thu, 29 Sept 2022 4:01:20 PM

நாளை மறுநாள் இந்த மாவட்டத்தில்  சேர்ந்த சில குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை

விழுப்புரம் : தமிழகம் முழுவதும் மாதம் தோறும் பகுதி வாரியாக தகுந்த முன்னறிவிப்போடு மின்தடை செய்யப்படுகிறது. தமிழக அரசு மாதந்தோறும் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

எனவே அதன்படி, மின் வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு முன் முறையாக அனைத்து மின் சாதனங்களும் அணைக்கப்பட்டு விட்டதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

electric resistance,vilipuram ,மின்தடை,விழுப்புரம்

அதையும் மீறி விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் உயர் அதிகாரிகள் தான் விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்த நிலையில், அக்டோபர் 1ம் தேதியான நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

இதனால் குத்தாம்பூண்டி ரோடு, பாரதி நகர், பழைய போலீஸ் நிலையம் தெரு, விக்கிரவாண்டி மெயின் ரோடு, ரெட்டிகுப்பம் ரோடு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :