நவம்பர் 30ம் தேதி அன்று இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்
By: vaithegi Mon, 28 Nov 2022 11:18:45 AM
சென்னை: தமிழக அரசு பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டு மின்தடை ஏற்படாத வகையில் தகுந்த உத்தரவுகளை அதிகாரிகளுக்கு வழங்கி துணை மின் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு செய்யப்படும் பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோகம் தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்சார வாரியம் முறையாக அறிவிப்புகளை வெளியிடும்.
அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது வரும் நவம்பர் 30ம் தேதி அன்று எந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை என பாப்போம்.மின் விநியோகம் தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மதர்பாக்கம்:மதர்பாக்கம், ஆரம்பாக்கம், கரடிபுதூர், பல்லவாடா வைகை அணை: வைகை அணை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், கைகளத்தூர்: பெருநில, கைகளத்தூர், மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.