Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் .....(ஜூன் 18) மின்தடை

By: vaithegi Thu, 16 June 2022 3:24:42 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் .....(ஜூன் 18) மின்தடை

திருநெல்வேலி : இன்றைய சூழ்நிலையில் மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் மனிதனுக்கு பலவகைகளிலும் பயன்படுவதால் அதன் தேவை மென்மேலும் அதிகரித்த காணப்படுகிறது. வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கணிப்பான், ஒளி நகல் கருவி, ஆகிய கருவிகளை இயக்க மின்சாரம் பயன்படுகிறது.

அந்த வகையில் மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் சாதனங்களில் உள்ள கோளாறுகளை சரி பார்த்து வருகின்றனர். தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, சமாதானபுரம், தியாகராஜ நகர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.அதன்படி,நாளை திருநெல்வேலி மாவட்டத்தில்காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை,மின் வினியோகம்,மின்சார வாரியம் ,மின்தடை ,மின் வினியோகம் ,மின்சார வாரியம்

அதன்படி, பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம் புதுவை நகர், அரசு அலுவலர் குடியிருப்பு, அன்பு நகர், மகிழ்ச்சி நகர், ரெட்டியார்பட்டி, திரு நகர், பொறியியல் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், அடைப்பான் குளம், டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, செங்குளம், மேல குலவணிகர்புரம், தெற்கு புறவழிச்சாலை, கண்டித்தார் குளம், ஓமநல்லூர், தருவைகுளம், முன்னீர்பள்ளம், மேல கருங்குளம், கோவின்புரம், வீரமணிகபுரம், குலவணிகர்புரம், மேலப்பாளையம், சிவந்திபட்டி, ராஜகோபாலபுரம், தியாகராஜநகர், இட்டேரி, தாமரைச்செல்வி சுற்றுவட்டாரங்களில் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருநெல்வேலி மின் செயற்பொறியாளர் சு. முத்துப்பாண்டி தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, மகாராஜா நகர், பேருந்து நிலையம், முருகன் குறிஞ்சி,திருச்செந்தூர் சாலை, பாளையங்கோட்டை மார்க்கெட் ,அசோக் திரையரங்கு, சமாதானபுரம், நீதிமன்ற பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூர் பகுதியில் உள்ள மின் நிலையங்களில் மின் பராமரிப்பு நடைபெறுவதால், சேரன்மகாதேவி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு, சுற்றுவட்டாரங்களில் மற்றும் சுத்தமல்லி பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Tags :