Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் (ஜூன் 28) மின்தடை

By: vaithegi Sun, 26 June 2022 12:15:41 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் (ஜூன் 28) மின்தடை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற ஜூன் 28 ந் தேதி வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கூடங்குளம், பழவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இப்பணியின் நிமித்தம் அத்துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

resistance,tirunelveli ,மின்தடை,திருநெல்வேலி

அதாவது கூடங்குளம் மற்றும் பழவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார் குளம், விஜயாபதி, திருவம்பலபுரம், ஆவரைகுளம், அம்பலவாணபுரம், பழவூர், யாக்கோபுரம், சிதம்பரபுரம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே நாளை மறுநாள் ஜூன் 28 அன்று மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்ற தகவலை வள்ளியூர் மின்விநியோக செயற்பொறியாளர் வளனரசு அவர்களும், பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீகலா அவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Tags :