Advertisement

திருநெல்வேலியில் நாளை மின்தடை

By: vaithegi Sun, 03 July 2022 1:42:32 PM

திருநெல்வேலியில் நாளை  மின்தடை

திருநெல்வேலி: அனைத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை பராமரிப்பது மிக முக்கியம் என்பதால் இப்பணியின் போது சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

அதன்படி நாளை ஜூலை 4ல் திருநெல்வேலி மாவட்ட தாழையூத்து பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மின் தடை செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

power outage,maintenance work ,மின்தடை  , பராமரிப்பு பணி

திருநெல்வேலி நெல்லை கிராமப்புற மின்கோட்டத்துக்கு உட்பட்ட தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை 4ந் தேதி (திங்கட்கிழமை) அன்று மின் பராமரி பணி நிமித்தம் அங்கிருந்து மின்வினியோகம் பெறும் மானூர் வட்டாரம்.

மேலும், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளதாக நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் அலெக்சாண்டர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

Tags :