Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (அகஸ்டு 20) மின்தடை

By: vaithegi Fri, 19 Aug 2022 6:09:59 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (அகஸ்டு 20) மின்தடை

திருவள்ளூர் : தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மக்களுக்கு தடையில்லா மின் விநியோகம் செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. அதன் படி தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடம்பத்தூர், பிரியாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர். நகர், ஸ்ரீதேவி குப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், திருப்பாச்சூர், கைவண்டூர், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர்.

மேலும் சின்னம்மாபேட்டை, அகரம், வெண்மணம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருமழிசை மின் செயற்பொறியாளர் கணபதி தெரிவித்துள்ளார்.

power outage,thiruvallur ,மின்தடை,திருவள்ளூர்

இதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த காக்களூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காக்களூர், சிட்கோ, ஆஞ்சநேயபுரம், நரசிங்கபுரம், திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி நாயுடு சாலை, வள்ளுவர் புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர் ஆகிய பகுதிகளிலும்

பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம், பென்னலூர் பேட்டை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது என திருவள்ளூர் மின் செயற்பொறியலாளர் தெரிவித்துள்ளார்.

Tags :