Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி மாவட்டத்தில்.... ஜூன் 18ம் (சனிக்கிழமை) தேதி மின்தடை

திருச்சி மாவட்டத்தில்.... ஜூன் 18ம் (சனிக்கிழமை) தேதி மின்தடை

By: vaithegi Thu, 16 June 2022 11:59:55 AM

திருச்சி மாவட்டத்தில்.... ஜூன் 18ம் (சனிக்கிழமை) தேதி மின்தடை

திருச்சி : தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்களில் ஏற்படும் கோளாறுகள், மின் இணைப்பு துண்டிப்பு, மின்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை சரி பார்க்கப்படுகின்றன. மின்தடை செய்யப்படும் பங்குகளில் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

அதனால் மின்சாரத்தை பயன்படுத்தி செய்யப்படும் பணிகளை முன் கூட்டியே செய்து முடித்து விடுகின்றனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.

resistor,power outage,leakage,power outage ,மின்தடை ,மின் இணைப்பு துண்டிப்பு, மின்கசிவு,மின்வாரியம்

அதன்படி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையம், மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பால பகுதி, ஜென்னிபிளாசா பகுதி,ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கன்வென்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, வ.உ.சி. ரோடு, கலெக்டர் அலுவலக ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளி தோப்பு, கல்லாங்காடு, பெரிய மிளகுபாறை, தலைமை தபால் நிலைய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வண்ணாரப்பேட்டை, சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யக்கொண்டான் திருமலை, வாசன் நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி,கனரா வங்கி காலனி, குமரன் நகர், சீனிவாச நகர், இராமலிங்க நகர், கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம்.நகர்,முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, வாலாஜா பஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, பாத்திமா நகர், குழுமணி சாலை, நாச்சியார் கோவில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, தீரன் நகர், பிராட்டியூர் மற்றும் ராம்ஜி நகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளனர்.

Tags :