Advertisement

திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூலை 27) மின்தடை

By: vaithegi Tue, 26 July 2022 7:17:42 PM

திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூலை 27) மின்தடை

திருச்சி : தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்கள் மூலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தகைய துணை மின் நிலையங்களை பராமரிப்பதற்காக மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

மேலும் இப்பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளில் மின் கம்பிகளை சரிசெய்தல், மின் இணைப்புக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அச்சமயத்தில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

resistance,strain ,மின்தடை,திருச்சி

அதன் படி திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வாளாடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான தர்மநாதபுரம், மைக்கேல்பட்டி, மேல பெருங்காவூர், ஒத்தை வீடு, சிறுமருதூர், செம்பழுனி.

மேலும் புதுக்குடி, மேளவாளாடி, எசனைகோரை, அப்பாதுரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை(ஜூலை 27) புதன்கிழமை மின் தடை செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :