Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மின்தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மின்தடை

By: vaithegi Tue, 23 Aug 2022 6:33:23 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மின்தடை

தூத்துக்குடி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மின் விநியோகத்தில் சற்று முரண்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது விவசாயத்திற்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது.

எனவே இதனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக மின்வாரியம் வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. இது மக்களிடையே மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பற்றி பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்புகள் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

power outage,thoothukudi ,மின்தடை ,தூத்துக்குடி

இதை அடுத்து தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள் மற்றும் மின் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை அறிவிக்கப்படுகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 25) கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு மையம், திருவேங்கடநாதபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :