Advertisement

தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை

By: vaithegi Mon, 22 Aug 2022 4:45:45 PM

தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள அரசடி துணை மின்நிலையம், கொம்புக்கார நத்தம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

எனவே இதனால் அரசடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மேலஅரசடி, கீழஅரசடி, சமத்துவ புரம், தருவைகுளம், பட்டினமருதூர், தருவைகுளம் மற்றும் பட்டினமருதூர் உப்பளம் சார்ந்த பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை, வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், மற்றும் எட்டயபுரம் ரோடு ஆகிய பகுதிகளிலும்,

power outage,thoothukudi ,மின்தடை ,தூத்துக்குடி

இதை அடுத்து கொம்புக்கார நத்தம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தா குறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி. தளவாய்புரம், ராமசாமி புரம் புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கொல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி

மேலும் மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

Tags :