நாளை தூத்துக்குடியில் மின்சாரம் நிறுத்தம்
By: vaithegi Thu, 29 Sept 2022 12:06:00 PM
தூத்துக்குடி: மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில்
அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது
சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்படுகிறது.
அத்துடன் பழுதாகி இருக்கும் மின் வயர்கள் உரிய முறையில் சரி
செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள
மரம், மர கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது.
இதை அடுத்து அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து (செப்.30)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி துணை மின்
நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதாவது அத்துணை மின்
நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கெச்சிலாபுரம் மின் தொடர்
மற்றும் மந்தித்தோப்பு மின் தொடர் போன்றவற்றை 11 கி.வோ மின் தொடராக
பிரிக்கும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த காரணத்தால்
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று கெச்சிலாபுரம், கிழவிப்பட்டி ஆகிய
பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை
செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.