Advertisement

நாளை விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை

By: vaithegi Wed, 24 Aug 2022 7:46:28 PM

நாளை விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை

விருதுநகர் : தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது.

எனவே அதன்படி நாளை விருதுநகரில் உள்ள எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.அதனால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். அந்த வகையில் நாளை (ஆக. 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

power outage,virudhunagar ,மின்தடை,விருதுநகர்

இதை தொடர்ந்து, எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான எரிச்சநத்தம், குமிழங்குளம், அழகாபுரி, மேல கோட்டையூர், ஆயர்தர்மம், சுப்புலாபுரம், சுரைக்காய் பட்டி, நடையனேரி, கிருஷ்ண மநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, கொங்கன்குளம், சிலார்பட்டி ஆகிய பகுதிகளிலும்

மேலும் முருகனேரி, சவ்வாஸ்புரம், கோட்டையூர், அக்கனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆக. 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Tags :