Advertisement

விருதுநகரில் நாளை (ஜூலை 12 ) மின்தடை

By: vaithegi Mon, 11 July 2022 5:06:35 PM

விருதுநகரில் நாளை (ஜூலை 12 ) மின்தடை

விருதுநகர்: தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தவறாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது பற்றி அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்படுகின்றது.

நாளை (ஜூலை 12) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அர்பன் பீடர், ஆறுமுகம் மில் பீடர், வடக்கு இண்டஸ்ட்ரியல் பீடர், திருவேங்கடபுரம், அட்டை மில் சட்டிக்கிணறு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

power outage,virudhunagar ,மின்தடை,விருதுநகர்

அதை தொடர்ந்து முக்குரோடு, சங்கம்பட்டி, ராமலிங்கபுரம் ரோடு, முதுகுடி, கோதை நாச்சியாபுரம், அப்பனேரி, பண்ணைக்காட்டு பகுதி கீழ ஆவாரம்பட்டி, கட்டபொம்மன் தெரு, செவல்பட்டி தெரு, காமராஜ் நகர், டி.பி. மில்ஸ் ரோடு,

மேலும் திரவுபதி அம்மன் கோவில் தெரு, மாடசாமி கோவில் தெரு, பெரிய கடை பஜார், தாலுகா ஆபிஸ், நீதிமன்றம், மாலையாபுரம், ராம் நகர், தாட்கோ காலனி, சக்தி நகர், மருதுநகர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags :