Advertisement

விருதுநகரில் நாளை (ஜூன் 29) மின் தடை

By: vaithegi Tue, 28 June 2022 12:05:06 PM

விருதுநகரில்  நாளை (ஜூன் 29) மின் தடை

விருதுநகர்: தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்தடை அறிவிக்கப்பட்டு மின் நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

மின் நிலையங்களில் உள்ள மின்னணு சாதனங்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு இருக்கிறதா, மின் இணைப்பில் ஏதேனும் துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறதா, வயர்களில் உராய்வு பெரும் மரக் கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மின் வாரிய ஊழியர்கள் சரி பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மின் வாரிய அதிகாரிகள் முன்பதாகவே தெரிவித்துள்ளார்கள். மின்சாரம் எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ அந்த அளவிற்கு தீமையை ஏற்படுத்தும்.

resistors,electronics,electricity ,மின்தடை ,மின்னணு சாதனங்கள்,மின்சாரம்

அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான மேற்கு, காவேரி நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சத்திர ரெட்டியபட்டி, பேராளி ரோடு, கருப்பசாமி நகர், அகமதுநகர், பரங்கிநாதபுரம், விக்னேஷ் காலனி, மீனாட்சிபுரம், பாண்டியன் காலனி, இந்திரா காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர்

மேலும், என்.ஜி.ஓ. காலனி கிழக்கு ஆகிய பகுதிகளில் மின் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் நாளை புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்ற தகவலை மின் வாரிய நிர்வாக இன்ஜினியர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags :