Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்டு 23) மின்தடை

By: vaithegi Mon, 22 Aug 2022 12:40:28 PM

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்டு 23) மின்தடை

விருதுநகர் : தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பல தரப்பு மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. இதற்கு, தமிழக அரசு மின் உற்பத்தி குறைவால் தான் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் துணை மின் நிலையங்களில் இருந்து வரும் மின்சாரத்தை மக்களுக்கு சீராக அளிக்கும் பட்சத்தில் மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. அதேபோன்று விருதுநகர் மாவட்டம் உள் அரங்கு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage,virudhunagar ,மின்தடை,விருதுநகர்

எனவே இதன் காரணமாக துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் ரோடு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி, கம்மாப்பட்டி, சத்தியமூர்த்தி சாலை, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, தந்தி மர தெரு, எல். ஐ. சி காலனி, கல்லூரி சாலை,

மேலும் ரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் வடக்கு பகுதி, காந்திபுரம் ரோடு, மணி நகரம், காசுக்கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags :