சிவகங்கை மாவட்டத்தில் நாளை(ஆகஸ்ட் 4) மின்தடை
By: vaithegi Wed, 03 Aug 2022 4:35:28 PM
சிவகங்கை : தமிழகத்தில் மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் தடை அறிவிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும். அதன்படி சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி, கல்லல் பகுதிகளுக்கு உட்பட்ட ஓக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம் ஆகிய பகுதிகளிலும்
மேலும் கருங்காப்பட்டி, தச்சம்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, ராமலிங்கபுரம்,வீழநேரி, நாமனூர், அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மாச்சிப்பட்டி, பிரவலூர், பேரணிப்பட்டி ஆகிய கிராமங்களிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நாளை (ஆகஸ்ட் 4) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் காரைக்குடி அருகே உள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் நடைபெறவிருக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக கல்லல், குறுந்தம்பாடு,ஆலம்பட்டு, அரண்மனை சிறுவயல், மாலை கண்டான், வெற்றியூர், சாத்தரசம்பட்டி, கௌரிபட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்மனூர், செவரக்கோட்டை, சொக்கநாதபுரம், கீழக்கோட்டை, ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்ய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து காரைக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், செக்காலைக்கோட்டை, பாரிநகர், கல்லூரிச்சாலை, செக்கலைசாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூர் சாலை, செஞ்சை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.