Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை

By: vaithegi Wed, 20 July 2022 11:18:05 AM

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை

பெரம்பலூர் : தமிழ்நாடு அரசு மின்சார வாரியமானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களின் கீழ் செயல்படும் மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படும்.

இதனால் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள்,மரக்கிளைகள் அகற்றும் பணிகள், புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணிகள்,புதிய இணைப்புகள் வழங்கும் பணிகள் ஆகிய பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். மின் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மின்விநியோகம் தடை அறிவிக்கப்படுகிறது.

power outage,perambalur ,மின்தடை ,பெரம்பலூர்

அதன்படி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, அ.மேட்டூர், கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், பெரியசாமி கோவில், அரசடிக்காடு, மேல குணங்குடி.

மேலும் வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம் ஆகிய ஊர்களிலும், கை.களத்தூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், அய்யனாரபாளையம், காரியனூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய ஊர்களிலும் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :