Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை

திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை

By: vaithegi Tue, 19 July 2022 12:58:31 PM

திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை

திருநெல்வேலி : மின்சார வாரியம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதம் ஒரு முறை மின்விநியோகம் தடை அறிவிக்கிறது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் ஏற்படும் மின் இணைப்பு பிரச்சனைகள், மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள்,மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றும் பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் மின் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் அல்லது உயிர் சேதமோ ஏற்படாத வகையில் மின்தடை செய்யப்படுகிறது.அதன்படி திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளான கரிசல்பட்டி, சேரன்மாதேவி, மேலக்கல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage,tirunelveli ,மின்தடை,திருநெல்வேலி

இதனால் அப்பகுதியில் இருந்து மின்விநியோகம் பெரும் கரிசல்பட்டி,பிள்ளைகுளம்,காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மாதேவி, கரிசூழ்ந்தமங்கலம்,

மேலும் கேசவசமுத்திரம், மேலக்கல்லூர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளங்குளம் ஆகிய பகுதிகளில் ஜூலை 21(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவது என கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :