Advertisement

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் நாளை மின்தடை

By: vaithegi Tue, 26 July 2022 1:09:27 PM

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் நாளை மின்தடை

திண்டுக்கல் : இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டு மாநிலங்களிடம் இருந்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அந்த துணை மின் நிலையங்களின் மூலமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் அத்தகைய துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பொருட்டு மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் கம்பிகளை சரிசெய்தல், மின் இணைப்புகளுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றுதல் போன்ற பணிகளில் மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

power outage,dindigul ,மின்தடை,திண்டுக்கல்

இதை அடுத்து இவ்வாறு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எந்தவித உயிரிழப்பும், இடையூறும் ஏற்படாதவாறு மின்விநியோகம் தடை அறிவிக்கப்படுகிறது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக எரியோடு, நாகையக்கோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தப்பட்டி, நல்லமனார்கோட்டை , மறவப்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் ரத்து என எரியோடு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ஆ.சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

Tags :