Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் நாளை மின்தடை

By: vaithegi Mon, 18 July 2022 1:14:07 PM

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் நாளை மின்தடை

திருநெல்வேலி : மின்சார வாரியம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதம் ஒரு முறை மின்விநியோகம் தடை அறிவிக்கிறது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் ஏற்படும் மின் இணைப்பு பிரச்சனைகள், மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் மின் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்போ அல்லது உயிர் சேதமோ ஏற்படாத வகையில் மின்தடை செய்யப்படுகிறது.

power outage,tirunelveli ,மின்தடை,திருநெல்வேலி

அதன்படி திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே பெருங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக 19ம் தேதி (நாளை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறப்படும் பகுதிகளான குமாரபுரம், புதியம்புத்தூர்,

இதை தொடர்ந்து மதகநேரி, மாற நாடார் குடியிருப்பு, செம்பிக்குளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்தரலிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கும், மேலும் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறப்படும் காற்றாலை பண்ணைகளுக்கும் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :