Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை

By: vaithegi Mon, 27 June 2022 9:19:26 PM

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை

திருநெல்வேலி : மாவட்டந்தோறும் குறிப்பிட்ட நாளில் மின்தடை ஏற்படுகிறது. மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பும் முன் கூட்டியே அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது..

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கூடங்குளம், பழவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை ( ஜூன் 28) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வள்ளியூர் மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் பேரும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம்,

resistor,power supply,power supply ,மின்தடை,மின்வாரியம் ,மின் விநியோகம்

மேலும், விஜயாபதி, திருவம்பலாபுரம், ஆவரைகுளம், அம்பலவாணபுரம், பழவூர், யாக்கோபுரம், சிதம்பரபுரம் மற்றும் அதன் அருகே இருக்கும் கிராமங்களுக்கு மின்சாரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை வள்ளியூர் மின்விநியோக செயற்பொறியாளர் வளனரசு, பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீகலா ஆகியோர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் முன் கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :