Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவேரிப்பட்டணத்தில் நாளை மறுநாள் மின்சாரம் விநியோகம் நிறுத்தம்

காவேரிப்பட்டணத்தில் நாளை மறுநாள் மின்சாரம் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Sun, 21 Aug 2022 08:17:19 AM

காவேரிப்பட்டணத்தில் நாளை மறுநாள் மின்சாரம் விநியோகம் நிறுத்தம்

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும்.

எனவே இப்பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும். அதன்படி நாளை மறுநாள் காவேரிப்பட்டணத்தில் நாளை மறுநாள் மின்சாரம் விநியோகம் நிறுத்தம்.

cauverypatnam,power outage ,காவேரிப்பட்டணம்  ,மின் தடை

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காவேரிப்பட்டணம் நகரம், தளி அள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம்,

மேலும் தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், குண்டலப்பட்டி, கத்தேரி, கருககன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பர்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் மின் தடை என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :