Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி மின்விநியோகம் நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி மின்விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Mon, 22 Aug 2022 11:19:27 AM

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி மின்விநியோகம் நிறுத்தம்

திருநெல்வேலி : தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் பயனர்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

power distribution,tirunelveli ,மின்விநியோகம் ,திருநெல்வேலி

மேலும் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் பற்றி அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றனர். இதை அறிந்து மின் பயனர்கள் முன் கூட்டியே மின் சார்ந்த பணிகளை முடித்து விடுகின்றனர்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் முருகானந்தபுரம், கூத்தன்குழி, உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளைய நயினார்குளம் போன்ற பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :