Advertisement

நாளை திருச்சியில் மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Mon, 19 Sept 2022 5:31:23 PM

நாளை திருச்சியில் மின் விநியோகம் நிறுத்தம்

திருச்சி: திருச்சியில் மின் விநியோகம் நிறுத்தம் ... செப்டம்பர் 20ம் தேதியான நாளை ( செவ்வாய்கிழமை) அன்று திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் முடிந்த பின் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

power outage,trichy ,மின் விநியோகம் நிறுத்தம் ,திருச்சி

அந்த வகையில் ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டர், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல்நகர், வ.உ.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி பகுதிகளிலும், வாழவந்தான்கோட்டை, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளிலும்

மேலும் திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் அறிவித்துள்ளார்.

Tags :