Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 17 ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 17 ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Sat, 15 Oct 2022 12:48:04 PM

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 17 ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

சென்னை: தமிழக அரசு மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை கொண்டு சென்று சேர்க்கவேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளது.எனவே இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்து கொண்டு வருகிறது. மேலும் துணை மின் நிலையங்களில் எந்த வித பழுதும் ஏற்படாமல் இருந்தால் தான் இவ்வாறு தடையில்லா மின்சாரத்தை மக்களுக்கு வழங்க முடியும்.

எனவே மாதத்தில் ஒருமுறையாவது துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அப்பொழுது அந்த துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகிப்பது நிறுத்தப்படுகிறது. அவ்வாறு வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 17,2022) எந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும் என்ற விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

power outage,chennai , மின் விநியோகம் நிறுத்தம் ,சென்னை

அதன்படி தேவகோட்டை:தேவகோட்டை, வேப்பங்குளம், வளமாவூர், ராம் நகர் , பழனி டி.கே: சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பங்கொண்டான், சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி

மேலும் திருச்செங்கோடு கொமராமங்கலம், பூவாலைக்குட்டை, எலச்சிபாளையம், புதிய நீர்நிலைகள், மாச்சம்பாளையம் , விருதுநகர் உள்புறம் ,பாண்டியன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் திங்கள் கிழமை (17.10.2022) மின் விநியோகம் தடை ஏற்படும்.

Tags :